பாவாடைக்குள் படமெடுத்த என்டியு மாணவருக்குச் சிறை

எம்ஆர்டி நிலையங்ளிலும் பல்கலைக்கழகங்களிலும் பெண்களின் குட்டைப் பாவாடைக்குள் படமெடுத்த நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) மாணவருக்கு 18 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கல்வியால் மனவுளைச்சல் ஏற்பட்டதை அடுத்து பெண்களின் பாவாடைக்குள் தமது கைபேசியைப் பயன்படுத்திப் படமெடுக்கத் தொடங்கியதாக 24 வயது சோங் யென் பின் தெரிவித்தார்.

பெண்களின் பிட்டங்களைப் படமெடுத்து அவற்றைப் பார்க்கும் பழக்கத்துக்கு தாம் அடிமையாகியதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தோ பாயோ பேருந்து நிலையத்தில் பெண் ஒருவருக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த சோங் சந்தேகத்துக்குரிய வகையில் தமது கைபேசியை அந்தப் பெண்ணுக்குப் பின்னால் சாய்த்து வைத்திருந்தததை பொதுமக்களில் ஒருவர் பார்த்தார்.

இதுகுறித்து டிரான்ஸ்காம் அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். தோ பாயோ எம்ஆர்டி நிலையத்தில் சோங்கைப் பார்த்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

சோங்கின் கைபேசியை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் பெண்களின் பாவாடைகளுக்குள் எடுக்கப்பட்ட படங்கள் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

26க்கும் மேற்பட்ட அத்தகைய படங்கள் இருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!