மின்ஸ்கூட்டர் ஓட்டுநருக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை

விடுமுறைக்காக சிங்கப்பூருக்கு வந்திருந்த வியட்னாமிய இளையர் மின்ஸ்கூட்டர் ஓட்டியபோது பாதசாரி மீது மோதி காயம் விளைவித்தார். அதற்காக 16 வயது நுவென் டோவான் நாமுக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 20ஆம் தேதியன்று தமது நண்பரிடமிருந்து நுவென் மின்ஸ்கூட்டரை இரவல் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

நண்பர் ஒருவரையும் மின்ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு போக்குவரத்துக்கு எதிரான திசையில் அவர் அதை சாலையில் ஓட்டியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேலாங் சாலையைக் கடக்க சாலையோர நடைபாதையில் 37 வயது திரு டியோ கோக் ஹோக் காத்துக்கொண்டிருந்தார்.

போக்குவரத்து வரும் திசையைப் பார்த்து வாகனங்கள் இல்லாததை உறுதி செய்த பிறகு சாலையைக் கடக்க திரு டியோ தொடங்கினார். அப்போது எதிர் திசையிலிருந்து வந்த மின்ஸ்கூட்டர் அவர் மீது மோதியது.

மின்ஸ்கூட்டர் மோதியதில் திரு டான் தரையில் விழுந்தார். விபத்து குறித்து அவர் போலிசாருக்குத் தகவல் தெரிவித்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நுவென் ஓட்டிய மின்ஸ்கூட்டர் பதிவு செய்யப்படவில்லை என்றும் அது மலேசியாவில் வாங்கப்பட்டது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கவனக்குறைவுடன் மின்ஸ்கூட்டர் ஓட்டி திரு டானுக்குக் காயம் விளைவித்த குற்றத்துக்காக நுவெனுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!