கழிவறையில் பெண்களைப் படம் எடுத்த இளையருக்குத் தடுப்புக்காவல்

கழிவறையில் பெண்களைப் படம் எடுத்த இளையருக்குத் தடுப்புக்காவல்

1 mins read
b03e8c96-a778-48eb-a84d-023d11e52276
-

வேலை பயிற்சிக்காக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவரான ஹூன் சி டொங், 23, தன் சக பெண் ஊழியர்களின் பாவாடைக்குள் படம் எடுத்ததுடன் கழிவறைக்குள் சென்று படம் பிடித்ததன் தொடர்பில் நேற்று 14 நாட்கள் தடுப்புக்காவல் விதிக்கப் பட்டது. இதன்படி குறுகிய காலத்திற்குச் சிறையில் அடைக்கப்பட்டால் விடுதலைக்கும் பின் ஹூனுக்கு எதிராக குற்றப் பதிவு இருக்காது. இத்துடன் 130 மணி நேரம் சமூகச் சேவை செய்யவும் ஹனுக்கு உத்தரவிடப்பட்டது.