எரிவாயு எண்ணெய் திருட்டு: ஐந்தரை ஆண்டுகள் சிறை

கிட்டத்தட்ட $200 மில்லியன் மதிப்பிலான எரிவாயு எண்ணெய்த் திருட்டு தொடர்பில் வியட்னாமிய ஆடவர் ஒருவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்துள்ள ஆகப் பெரிய எரிவாயு எண்ணெய்த் திருட்டுச் சம்பவம் இது. கப்பல் கேப்டனாக இருந்த டோன் ஸுவான் தான், 47, எரிவாயு எண்ணெய்த் திருட்டு தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகவும் இவ்வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்படும் இரண்டாவது நபர் என்றும் கூறப்பட்டது. தான் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின்படி, திருடப்பட்ட எரிவாயு எண்ணெய்யின் மதிப்பு $5.7 மில்லியன் அமெரிக்க டாலர் (S$7.7 மி.) என்று கூறப்பட்டது.

2014ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் எரிவாயு எண்ணெய்த் திருட்டின் மொத்த அளவு 340,000 டன்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இவ்வாண்டு ஜூலை மாதத்தில் இதே எரிவாயு எண்ணெய்த் திருட்டு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு வியட்னாமியரான டங் வன் ஹானுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. புலாவ் புக்கோமில் அமைந்துள்ள ‘ஷெல்’ எண்ணெய்ச் சுத்திரிப்பு ஆலையின் எரிவாயு எண்ணெய் திருட்டு தொடர்பில் முன்னாள் ‘ஷெல்’ ஊழியர்கள் உட்பட மேலும் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!