சாலைப் பயன்பாடு தொடர்பான தகராறு; பாதசாரியை அபாயகரமான முறையில் தாக்கிய பிஎம்டி ஓட்டுநர் கைது

சாலையைப் பயன்படுத்துவதன் தொடர்பில் மூண்ட சண்டையில் தனிநபர் நடமாட்டச் சாதனத்தைப் (பிஎம்டி) பயன்படுத்திய 24 வயது ஆடவர் மற்றவரைத் தாக்கினார்.

வேண்டுமென்றே அபாயகரமான பொருளால் தாக்கி காயம் விளைவித்ததாக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

காயமடைந்தவரிடமிருந்து கடந்த மாதம் 26ஆம் தேதி இது குறித்து புகார் பெற்றதாகக் குறிப்பிட்ட போலிசார், பாதசாரி ஒருவருக்கும் பிஎம்டி ஓட்டிச் சென்ற ஒருவருக்குமிடையே இயோ சூ காங் ரோட்டில் சண்டை மூண்டதாகக் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவத்தில் பாதசாரிக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.

தொடர்ந்து அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட பிஎம்டி ஓட்டுநரின் அடையாளம் கண்டறியப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) அன்று அவர் ஹவ்காங் ஸ்திரீட் 31ல் கைது செய்யப்பட்டார்.

போலிஸ் விசாரணை தொடர்கிறது.

அபாயகரமான முறையில் வேண்டுமென்றே காயம் விளைவிப்போருக்கு ஏழாண்டுகள் வரை சிறத் தண்டனை, பிரம்படிகள், அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!