வருமானத்தில் $1.28 மில்லியன் குறைத்துக் காட்டிய குற்றத்திற்காக ஆலோசனை சேவை நிறுவன முதலாளி ஒருவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் $741,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. இங் வீ கெங் எனப்படும் அவர் ‘எஸ்எம்இ கிராண்ட் அஸிஸ்ட்’ என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வருமான வரி ஏய்ப்பை நோக்கமாகக் கொண்டு தமது வருவமான வரிப்படிவத்தில் பொய்த் தகவல்கள் அளித்த இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை அறிவிக்கப் பட்டது. அவர் இவ்வாறு செய்ததன் மூலம் கடந்த 2015, 2016 கணக்கீட்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட $250,000 வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக உள்நாட்டு வருவாய் ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் வரிப்படிவ தாக்கலில் தவறு நிகழ்ந்திருந்தால் அது குறித்த தகவல் களை உடனடியாகத் தெரிவிக்குமாறு நிறுவனங்களையும் தனிப்பட்டவர்களையும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
வருமானத்தை குறைத்துக் காட்டிய நிறுவன முதலாளிக்கு தண்டனை
24 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Dec 2019 08:31

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ சிங்கப்பூர் நெடுந்தொலைவோட்டம் 2023ன் முக்கிய காட்சிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!