நார்த்பாய்ண்ட் சிட்டி கடைத்தொகுதியில் மின்படியில் விழுந்த முதியோர் காயம்

ஈசூனில் உள்ள ‘நார்த்பாய்ண்ட் சிட்டி’ கடைத்தொகுதியில் மின்படியைப் பயன்படுத்திய முதியோர் மூவர் தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இச்சம்பவம் நடந்ததாக ‘த நியூ பேப்பர்’ நாளிதழ் தெரிவித்தது.

கீழே விழுந்தவர்களில் இருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் நால்வர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அன்று மாலை 5.30 மணியளவில் மேல்மாடியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மின்படியில் அந்த முதியோர் நின்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த மூவருக்கு 60 முதல் 70 வயது வரை இருக்கும்.

சம்பவம் நிகழ்ந்தபோது அருகில் இருந்தவர்கள் உடனே மின்படியில் உள்ள அபாய பொத்தானை அழுத்தி மின்படியை நிறுத்தியதாகவும் கூறப்பட்டது.

இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த கடைத்தொகுதி நிர்வாகத்தினர், மின்படியில் கோளாறு எதுவும் இருந்ததாக தெரியவில்லை என்று கூறினர். அன்று இரவு 9.15 மணியளவில் மின்படி மீண்டும் இயங்கத் தொடங்கியதாகவும் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!