பெண் குளிக்கையில் கைபேசி கேமராவை அவரை நோக்கி காட்டினார் 

சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாம் ஒன்றில் தமது சக முகாம் தோழியை பயமுறுத்தும் நோக்கத்தில் அவர் குளிக்கும்போது 19 வயது இளையர் ஒருவர் தமது கைபேசி கேமராவை அவர் குளிக்கும் திசையை நோக்கி காட்டினார்.

குற்றம் புரிந்தவருக்கு இப்போது 20 வயதாகிறது. பெண்ணை மானபங்கப்படுத்திய அவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் 19 வயது நிரம்பியிருந்ததால், தடை உத்தரவு காரணமாக குற்றம் புரிந்தவரின் பெயரையும் பள்ளியின் பெயரையும் வெளியிட முடியாது. குற்றம் நடந்தபோது அந்த இளையர் அப்பள்ளியில் பயிலவில்லை என்றும் அறியப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி, சீருடைப் பிரிவு ஒன்று தனது இரவு நேர முகாமை நடத்திக்கொண்டிருந்தது. அப்போது பின்னிரவு 2.20 மணிக்கு அந்தப் பெண் குளித் துக்கொண்டிருக்கும்போது, இளையர் கைபேசி கேமராவை குளியல் அறைக்கு மேலே தூக்கிக் காண்பித்தார். அதைப் பார்த்த பெண் கூச்சலிட்டபோது, இளையர் தப்பித்தார்.

முகாமின் பாதுகாப்பு அதிகாரியிடம் பெண் சம்பவம் பற்றி தெரிவித்த சமயத்தில் இளையர் தாம் அவ்வாறு செய்ததை ஒப்புக்கொண்டார். அந்த கைபேசியில் காணொளி எதுவும் பதிவாகவில்லை. $10,000 பிணையில் விடுவிக்கப்பட்ட இளையரின் தண்டனை விதிப்பு ஜனவரி மாதம் 21ஆம் தேதி அறிவிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!