உணவு சுகாதாரக் குறைபாடு: நிறுவனத்திற்கு $6,000 அபராதம்

உணவு தயாராகும் இடம் சரியாகப் பராமரிக்கப்படாமல் சுத்தமாக இல்லாத காரணத்தால் ‘ஒபேயட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்திற்கு நேற்று $6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சமைத்த உணவைத் தயார் செய்யும் இந்நிறுவனம் அதன் சமையல் இடத்தைச் சுகாதாரமான முறையில் பராமரிக்கவில்லை என்பதை வழக்கமான சோதனைகளின்போது சிங்கப்பூர் உணவு அமைப்பு கண்டறிந்தது.

இச்சோதனைகள் செப்டம்பர் 5, நவம்பர் 15 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன.

சமையல் இடத்தில் அதிக அளவிலான கரப்பான்பூச்சிகள் காணப்பட்டதுடன் உடைந்த தரை ஓடுகள், ஈக்கள், எறும்புகள் போன்றவற்றின் ஆக்கிரமிப்பு ஆகியனவும் இருந்ததாக அமைப்பு கூறியது.

அத்துடன் பானைகளில் இறந்த கரப்பான்பூச்சிகளின் உடலும் அடுப்பின் மேல் கரப்பான்பூச்சி முட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. பங்ளாதேஷை சேர்ந்த ஒபேதூர் ரஹ்மான் இந்த நிறுவனத்திற்கு உரிமையாளர் என்று கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!