புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி டிசம்பர் 31ஆம் தேதி பொதுப்போக்குவரத்துகளான ரயில், பேருந்துச் சேவைகளின் நேரம் நீட்டிக்கப்படுவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நேற்று தெரிவித்தது. வடக்கு-கிழக்கு ரயில் சேவை குறைந்தது 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது. ஹார்பர்ஃபிரண்ட் ரயில் நிலையத்தில் இருந்து பொங்கோல் செல்லும் கடைசி ரயில், பின்னிரவு 2.16க்குக் கிளம்பும். அதேபோல் பொங்கோல் ரயில் நிலையத்தில் இருந்து பின்னிரவு 1.45 மணிக்கு கடைசி ரயில் கிளம்பும். பொங்கோல் - செங்காங்குக்கு இடையேயான எல்ஆர்டி ரயில் சேவைகளும் கடைசி வடக்கு கிழக்கு ரயில் சேவை வரை நீட்டிக்கப்படும்.டௌன்டவுன் ரயில் சேவை புக்கிட் பாஞ்சாங் நிலையத்தில் இருந்து கடைசி ரயில் பின்னிரவு 1.48க்கும் எக்ஸ்போ நிலையத்தில் இருந்து கடைசி ரயில் பின்னிரவு 1.49க்கும் கிளம்பும். இதனையடுத்து டிசம்பர் 31ஆம் தேதி 25 பேருந்துச் சேவைகளின் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவுநேரத்தில் சேவையாற்றும் ஆறு பேருந்துகளின் சேவை அதிகாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டுக்காக ரயில், பேருந்து நேரம் நீட்டிப்பு
27 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Dec 2019 09:34

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!