புத்தாண்டுக்காக ரயில், பேருந்து நேரம் நீட்டிப்பு

புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி டிசம்பர் 31ஆம் தேதி பொதுப்போக்குவரத்துகளான ரயில், பேருந்துச் சேவைகளின் நேரம் நீட்டிக்கப்படுவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நேற்று தெரிவித்தது. வடக்கு-கிழக்கு ரயில் சேவை குறைந்தது 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது. ஹார்பர்ஃபிரண்ட் ரயில் நிலையத்தில் இருந்து பொங்கோல் செல்லும் கடைசி ரயில், பின்னிரவு 2.16க்குக் கிளம்பும். அதேபோல் பொங்கோல் ரயில் நிலையத்தில் இருந்து பின்னிரவு 1.45 மணிக்கு கடைசி ரயில் கிளம்பும். பொங்கோல் - செங்காங்குக்கு இடையேயான எல்ஆர்டி ரயில் சேவைகளும் கடைசி வடக்கு கிழக்கு ரயில் சேவை வரை நீட்டிக்கப்படும்.டௌன்டவுன் ரயில் சேவை புக்கிட் பாஞ்சாங் நிலையத்தில் இருந்து கடைசி ரயில் பின்னிரவு 1.48க்கும் எக்ஸ்போ நிலையத்தில் இருந்து கடைசி ரயில் பின்னிரவு 1.49க்கும் கிளம்பும். இதனையடுத்து டிசம்பர் 31ஆம் தேதி 25 பேருந்துச் சேவைகளின் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவுநேரத்தில் சேவையாற்றும் ஆறு பேருந்துகளின் சேவை அதிகாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!