‘சாங்கி குழுமம் இந்தோனீசிய விமான நிலையத்தை நிர்வகிக்கும்’

இந்தோனீசியா தனது கொமோடோ விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சாங்கி குழுமத்திற்கு வழங்கியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு முதல் அந்நாட்டில் உள்ள மேலும் பல விமான நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. கொமோடோ விமான நிலைய நிர்வாகம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிடி கார்டிக் ஏரோ சர்வீசஸ் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இண்டர்நே‌ஷனல் பிரைவேட் லிமிட்டெட் ஆகிய இரு நிறுவனங்களை உள்ளடக்கிய சிங்கப்பூர் சாங்கி குழுமத்தால் நிர்வகிக்கப்படும்.

விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்று இந்தோனீசியாவின் நிதி அமைச்சர் முல்யாணி இந்திராவதி தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் தீவான லபுவான் பாஜோ நகரில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.

இந்த விமான நிலைய மேம்பாட்டுக்காக இந்தோனீசியா வரும் ஐந்து ஆண்டுகளில் $116 மில்லியன் செலவிடவுள்ளது.

பெரிய விமானங்களைக் கையாளும் விதத்தில் விமான ஓடு பாதை நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் புடி கர்யா சுமாடி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!