பிடோக்கில் உள்ள ‘அக்வேரியஸ் பை த பார்க்’ எனும் கொண்டோ மினியத்தில் நேற்று முன்தினம் பின்னிரவில் தீ மூண்டது.
அந்த அடுக்குமாடிக் கட்டடத் தில் உள்ள ஒரு வீட்டின் சன்னலி லிருந்து தீப்பிழம்புகள் வெளிக் கிளம்பியதை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த படங்களும் காணொளிகளும் காட்டின.
சம்பவம் நடந்த இடத்துக்கு குறைந்தது ஏழு போலிஸ் வாக னங்களும் நான்கு தீயணைப்பு வாகனங்களும் அனுப்பப்பட்டன. அந்தக் கட்டடத்தின் 14வது மாடியில் உள்ள படுக்கை அறை யில் நேற்று முன்தினம் பின் னிரவு 12.40 மணிக்கு தீ மூண் டது.
நீரைப் பீய்ச்சியடிக்கும் ஒரு சாதனத்தைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது என்றும் இச் சம்பவத்தில் எவருக்கும் காயம் இல்லை என்றும் சிங்கப்பூர் குடி மைத் தற்காப்புப் படை கூறியது.
தீச் சம்பவம் குறித்து விசா ரணை தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, தோ பாயோ வில் உள்ள டிரெலிங் டவர்ஸ் கொண்டோமினியத்தில் நேற்றுக் காலை தீ மூண்டது.
சம்பவம் குறித்து நேற்றுக் காலை 10.20 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அந்த அடுக்குமாடிக் கட்டடத் தின் 15வது மாடியில் உள்ள வீட் டின் வரவேற்புக் கூடத்தில் தீ மூண்டிருந்தது.
நீரைப் பீய்ச்சியடிக்கும் சாத னத்தைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது என்றும் இதில் எவருக்கும் காயம் இல்லை என்றும் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.
சம்பவ இடத்துக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வந்து சேர்வதற்குள் அந்தக் கட்டடத்தில் வசிக்கும் கிட்டத் தட்ட 200 குடியிருப்பாளர்கள் தாங்களாகவே அங்கிருந்து வெளியேறினர் என்றும் தெரி விக்கப்பட்டது.