ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தி லிருந்து நான்கு பயணிகளை தமது டாக்சியில் ஏற்றிக் கொண்ட ஓட்டுநர், வாகனத் துக்குள் போக்கிரித்தனமாக நடந்த அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் அவர்களில் ஒருவர் ஓட்டுநரின் முகத்தில் குத்தி விட்டார். அவ்வாறு செய்த 32 வயது முகம்மது ஃபட்லி ரோஸ்லிக்கு நேற்று நான்கு வாரச் சிறை தண்டனை விதித்த நீதிபதி, டாக்சி ஓட்டுநர் தமது சிகிச் சைக்கு செலவழித்த தொகை யையும் கொடுக்க உத்தர விட்டார். செங்காங் பொது மருத்துவமனைக்குச் சென்ற டாக்சி ஓட்டுநருக்கு இரண்டு நாள் மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டது.
டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய பயணிக்கு நான்கு வாரச் சிறை
1 mins read

