சிங்கப்பூரின் ‘ஸ்டார்ஹப்’ தொலைத்தொடர்பு நிறுவனமும் மலேசியாவின் ‘யு மொபைல்’ இணைந்து ஐந்தாம் தலைமுறைத் (5G) தொலைத்தொடர்புக் கட்டமைப்பை அடுத்து ஆண்டு முதலாம் காலாண்டில் சோதித்துப் பார்க்கவிருக்கிறது என்று அவ்விரு அமைப்புகளும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
அந்தச் சோதனைத் திட்டம் ‘ஹுவாவெய்’ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நான்காம் தலைமுறை தொலைத்தொடர்பின் உள்கட்டமைப்பின் துணையுடன் தனித்து நடத்தப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எல்லை தாண்டிய ‘ஹோலோகிராஃபிக்’ அழைப்புகளும் பல தரப்புகள் பங்குகொள்ளும் காணொளி அழைப்புகளும் சோதித்துப் பார்க்கப்படும்.
இரண்டு நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக விலைக் குறையீட்டை இரு அமைப்புகளும் ஆராய்ந்து முடிவெடுக்கும்.
“5G வெளிநாட்டுத் தொலைத்தொடர்பு சோதனையை நமது அண்டை நாடான மலேசியாவில் தொடங்குவதுதான் சிறந்தது என்று முடிவெடுத்தோம். எங்கள் வாடிக்கையாளர் கள் அதிகம் செல்லும் நாடு மலேசியாதான்,” என்றார் ஸ்டார்ஹப்பின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி சோங் சியூ லூங்.