ரயிலில் பெண்ணை ஆபாச படமெடுத்த ஆசிரியருக்கு தண்டனை

ரயிலில் பயணம் செய்த பெண்ணை ஆபாச படம் எடுத்த குற்றத்திற்காக கல்வி நிலையத்தின் ஆசிரியர் ஒருவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டன.

ஷோஹெய் யாமாமோட்டோ, 33, எனப்படும் அந்த ஆடவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதி காலை 9.40 மணிவாக்கில் பொத்தோங் பாசிர் நிலையத்தில் ரயில் ஏறிய அவர், பெண் பயணி ஒருவரின் அருகில் சென்றார். பின்னர் தமது கைப்பெட்டி மேல் கைபேசியை வைத்து பெண்ணின் உள்பாவாடைக்குள் காணொளி படத்தை ரகசியமாக எடுத்துக்கொண்டு இருந்தார்.

டோபி காட் நிலையத்தை ரயில் நெருங்கியபோது ஏதோ தமது காலில் உரசுவதை அறிந்த பெண், கைபேசியைக் கண்டு அதிர்ந்தார். நிலையத்தில் ரயில் கதவுகள் திறந்தபோது அந்தப் பெண்ணின் பிடியிலிருந்து யாமாமோட்டோ தப்பினார். எம்ஆர்டி நிலையத்தில் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து அவரை போலிசர் தேடிப்பிடித்து கைது செய்தனர்.

யாமாமோட்டோவுக்கு நேற்று முன்தினம் 24 நாள் சிறை, $15,000 அபராதம் ஆகியன விதிக்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!