பொது இடத்தில் சிறுநீர் கழித்த டாக்சி ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த கம்ஃபர்ட்டெல்கிரோ

பொது இடத்தில் சிறுநீர் கழித்த டாக்சி ஓட்டுநருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கம்ஃபர்ட் டெல்கிரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்துக்கு வெளியில் கம்ஃபர்ட் டெல்கிரோ டாக்சி ஓட்டுநர் ஒருவர் சிறுநீர் கழிப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது.

சிறுநீர் கழிக்க கழிப்பறையைப் பயன்படுத்தாமல் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை பல சமூக ஊடகவாசிகள் பழித்துக் கூறினாலும் சிலர் அவர்மீது அனுதாபமும் காட்டினர்.

தன்னுடைய செயலுக்கு அந்த டாக்சி ஓட்டுநர் வருத்தம் தெரிவித்ததாக ‘ஸ்டோம்ப்’ செய்தியாளரிடம் தெரிவித்த கம்ஃபர்ட் டெல்கிரோ குழும தலைமை நிறுவனத் தொடர்பு அதிகாரி டாம்மி டான், அவரது செயலுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!