போதைப் பொருள் சம்பவம்  தொடர்பில் இருவர் கைது

புத்தாண்டு தினத்தன்று புக்கிட் மேராவில் நிகழ்ந்த போதைப் பொருள் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருளை உட்கொண்ட தற்காக 52 வயது மாதும் பொதுச் சேவை அதிகாரி தமது கடமையை ஆற்றுவதிலிருந்து முரட்டுத்தனமாகத் தடுத்ததற் காக 55 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டதாக போலிஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

புத்தாண்டு தினத்தில் புக்கிட் மேரா, புளோக் 3ல் நடந்த இச்சம்பவம் குறித்து தங்களுக்கு மாலை 6.32 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் இது குறித்து புலனாய்வு நடைபெற் றுக்கொண்டிருக்கிறது என்றும் போலிஸ் கூறியது.

இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி மீட்புக் குழுவுக்கு (டார்ட்) அன்று இரவு 9 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபர்களில் ஒருவர் அந்தப் புளோக்கின் 11வது மாடியிலிருந்து குதிக்கப் போவதாக மிரட்டினார் என்று அறியப்படுகிறது.

அந்தப் பகுதியில் தனது குடும்பத்துடன் இரவு உணவு உண்டு கொண்டிருந்த நிகழ்ச்சிகள் நிர்வாகியான 51 வயது பெர்வின் லோ, அங்கு டார்ட் வாகனம், இரண்டு தீயணைப்பு வாகனங்கள், மூன்று போலிஸ் வாகனங்கள், ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவற்றைப் பார்த்ததாகக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!