1,100 டெக் கீ மாணவர்களுக்கு கல்வி உதவி

டெக் கீ வட்டாரத்தைச் சேர்ந்த 1,100 பேருக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் மேற்கொண்ட சிறப்பு முயற்சிகளுக்காக நேற்று சிறப்பிக்கப்பட்டனர்.

டெக் கீ குடிமக்கள் ஆலோசனைக் குழு கல்வி உபகாரச் சம்பளம் 351 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

கல்வி அமைச்சின் எடுசேவ் பரிசுகளை 760 பேர் பெற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் பிரதமரும் அங் மோ கியோ குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

குடும்ப வருவாய், பள்ளி முதல்வர்கள் செய்யும் பரிந்துரை, கல்வித் தேர்ச்சிகள், நல்ல நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு இந்த படிப்பு உதவிகள் வழங்கப்படுகின்றன.

கல்வி உதவி பெற்றவர்களை பிரதமர் லீ பாராட்டினார். குடும்பத்திற்கு அதிகம் செலவாகும் என்ற அச்சம் காரணமாக யாரும் கல்வியைப் பாதியில் விட்டுவிடும் நிலை கூடாது என்று பிரதமர் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!