மிடில் ரோட்டில் உள்ள கேளிக்கைக் கூடத்தில் தீ; 60 பேர் வெளியேற்றம்

மிடில் ரோட்டில் அமைந்திருக்கும் ‘பண்டோரா கிளப் அண்ட் கேடிவி’ எனப்படும் கேளிக்கைக் கூடத்தில் தீப்பற்றியது.

அந்த விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சுமார் 60 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

காலை 11.15 மணியளவில் இந்தச் சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. 114 மிடில் ரோடு முகவரியில் இருக்கும் லீ காய் ஹவுசின் நான்காவது மாடியில் இந்த கேளிக்கைக் கூடம் அமைந்துள்ளது.

தீ கொழுந்துவிட்டு எரிந்ததாகவும் கரும்புகை படர்ந்ததாகவும் கூறப்பட்டது.

ஒன்பது அவசர வாகனங்களுடன் 30 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இரண்டு தண்ணீர்க் குழாய்களைப் பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது.

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கூடத்தின் உட்புறத்தைக் காட்டும் 37 வினாடிகளுக்கான காணொளியை படை வெளியிட்டது.

அங்கிருந்தோரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் உதவ போலிசாரின் உதவி முன்னதாக நாடப்பட்டது.

புகையை சுவாசித்ததன் தொடர்பில் ஒரு பெண் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தீயணைக்கும் பணியில் ஈடுபட்டபோது சுவாசக் கருவிகளை அதிகாரிகள் பயன்படுத்தினர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்த விசாரணை நடைபெறுகிறது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!