லிட்டில் இந்தியாவுக்கு வருகை அளிப்போர், கலைப் படைப்புகள், பயிலரங்குகள், சுவர் ஓவியங்கள் ஆகியவற்றில் திளைக்கலாம்.
பொதுமக்களுக்கான வருடாந்தர கலைத் திட்டமான ‘ஆர்ட்வாக் லிட்டில் இந்தியா’, லிட்டில் இந்தியாவின் வரலாற்றுக்கும் பாரம்பரியத்திற்கும் உயிரூட்டுவதுடன் சமூகத்தினரின் தனிப்பட்ட கதைகளையும் எடுத்துக்கூறி வருகிறது.
‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை சங்கத்தின் ஆதரவில் லாசால் கலைக் கல்லூரி மாணவர்களும் சிங்கப்பூர் சுற்றுப்பயணக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்யும் சிறப்பு நிகழ்ச்சிகள் நாளை (ஜனவரி 10), நாளை மறுநாள் மற்றும் இம்மாதம் 17, 18 தேதிகளன்று நடைபெறுகின்றன.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity