சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் மலேசியர்கள்தான் அதிகமானவர்கள் என்று ஐநா வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களில் கிட்டத்தட்ட 44 விழுக்காட்டினர் மலேசியர்கள். வெளிநாட்டு ஊழியர்களில் 18 விழுக்காட்டினர் சீனாவைச் சேர்ந்தவர்களும் 5.9 விழுக்காட்டினர் இந்தியர்களும் அடங்குவர்.
1990ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையிலான தரவுகளைக் கொண்டு அறிக்கை வெளியிடப்பட்டது.