குப்பைத்தொட்டியில் கைவிடப்பட்ட குழந்தை சீரான நிலையில்

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிடோக் நார்த் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை, தற்போது மருத்துவமனையில் சீரான உடல்நிலையில் உள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

ரத்தக் கறை படிந்த நெகிழிப் பைக்குள் வைத்துக் கட்டப்பட்ட குழந்தையை, இம்மாதம் 7ஆம் தேதியன்று துப்புரவாளர் ஒருவர் கண்டுபிடித்தார். புளோக் 534, பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது.

குழந்தையைக் கொண்டிருந்த பை, குப்பைத்தொட்டியில் இருந்த பல குப்பைப் பைகளுக்கு மத்தியில் கிடந்ததாகக் கூறப்பட்டது.

குழந்தையைக் கண்டெடுத்தபோது அதன் உடலில் எந்தக் காயமும் இல்லை.

கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை குறித்து போலிசின் விசாரணை தொடர்கிறது.

இதற்கிடையே கடந்த பத்தாண்டுகளில் பதின்ம வயது பெண் களுக்குக் குழந்தை பிறக்கும் விகிதம் குறைந்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!