வூஹான் ‘கொரோனா’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரில் சுமார் 20 விழுக்காட்டினரின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தொற்றுநோய் நிபுணர் ஷான் வாசு கூறியுள்ளார்.
இந்த விகிதம் தற்போதைய நிலவரப்படி அமைகிறது என்றும் வைரஸ் பற்றி கூடுதல் விவரங்கள் தெரிய வரும்போது இந்த நிலை மாறும் என்றும் தொற்றுநோய் தடுப்புக்கான தேசிய நிலையத்தின் தற்காலிக நிலைய இயக்குநரான டாக்டர் வாசு தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தற்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வைரஸ் வேகமாகப் பரவிவரும் சீனாவுக்கு அந்த நால்வரும் பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் பலரின் உயிரைப் பறித்துவிட்டது.