இவ்வாண்டு முத்தமிழ் விழாவை ஒட்டி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழக்கம்போல் சிறுகதைப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
போட்டிக்குப் பங்கேற்பாளர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவும் இளம் மற்றும் வளரும் புதிய எழுத்தாளர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் சிறுகதைப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்தப் பயிலரங்கு உயர்நிலை நான்கு, ஐந்து மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்கள், பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்துப் பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் தொடக்கநிலை எழுத்தாளர்கள் மற்றும் கதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்ந்த உள்ளூர் எழுத்தாளர்களும் பயிற்றுவிப்பாளர்களும் இப்பயிலரங்கை வழி நடத்துவார்கள்.
பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி, பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயிலரங்கில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. பொதுமக்களுக்கு 10 வெள்ளி கட்டணம்.
பயிலரங்கில் கலந்துகொள்வதற்காகப் பதிவுசெய்ய இறுதி நாள் 31/01/2020. மேல்விவரங்களுக்கு: www.singaporetamilwriters.com என்ற இணையப்பக்கத்தை நாடலாம்; அல்லது திருமதி பிரேமா மகாலிங்கம் 9169 6996, திருமதி மணிமாலா மதியழகன் mathimanimala@gmail.com (8725 8701) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் 50 பங்கேற்பாளர்களே கலந்துகொள்ள முடியும் என்பதால் முதலில் வருவோருக்கே முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில் பதிவு செய்யப்படும்.
தங்கள் எழுத்தாற்றலை மேம்படுத்த மாணவர்களும் வளரும் எழுத்தாளர்களும் கலந்துகொண்டு பயனடையுமாறு எழுத்தாளர் கழகம் கேட்டுக்கொள்கிறது.