லெங்கோக் பாருவில் அபாயகரமான ஆயுதத்தால் தாக்கியதாக ஆடவர் கைது

அபாயகரமான ஆயுதத்தைக்கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதற்காக லெங்கோக் பாருவில் 24 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று (ஜனவரி 28) அதிகாலை 2.50 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

தாக்கப்பட்டவரின் கையில் காயங்கள் இருந்தன.

கிளமென்டி போலிஸ் பிரிவு அதிகாரிகள் தாக்குதலில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டு அதே நாளில் அவரைக் கைது செய்தனர்.

அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதாக அந்த ஆடவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி போன்றவை விதிக்கப்படலாம்.

சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிசார் தெரிவித்தனர்.

#தமிழ்முரசு #அபாயகரமானஆயுதத்தால்தாக்கி #லெங்கோக்பாரு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!