தங்கையைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்திய 22 வயது ஆடவருக்கு பதினொன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும் ஏழு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
தமது தங்கைக்கு 5 வயதாக இருந்தபோது அச்சிறுமியை அந்த ஆடவர் மானபங்கம் செய்தார். அப்போது அவருக்கு 13 வயது. இணையத்தில் ஆபாசக் காட்சிகளைப் பார்த்ததால் தமது தங்கையை மானபங்கம் செய்ததாக அவர் தெரிவித்தார்.
அச்சிறுமி 12 வயதானதும் அவளை அந்த ஆடவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைப் பாதுகாக்க அவரைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்திய அவரது அண்ணனின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அச்சிறுமிக்குத் தற்போது 14 வயது. தமது மகனின் பாலியல் செயல்களைப் பற்றி அறிந்திருந்த அவரது தாயார் தமது மகள் கர்ப்பமானதும் அவர் மீது சந்தேகப்பட்டார்.
கருவைக் கலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிய, தமது மகள் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மற்றவர்களிடமிருந்து மறைக்க சிறுமியைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினார்.
இருப்பினும், அச்சிறுமி கர்ப்பமாக இருப்பதைப் பள்ளி கண்டுபிடித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தது.
அச்சிறுமி கர்ப்பமடைய அவரது அண்ணன் காரணமல்ல என்றும் இன்னொருவர் காரணம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அச்சிறுமிக்குப் பிறகு சிங்கப்பூரில் கருகலைப்பு செய்யப்பட்டது.
#தமிழ்முரசு #அண்ணன்தங்கை #பாலியல்வன்கொடுமை