வூஹான் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் சிங்கப்பூரர்

வூஹான் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் சிங்கப்பூரராக 47 வயது பெண்மணி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தம்முடைய குடும்பத்தாருடன் வூஹான் சென்றிருந்த அவர், நேற்று முன்தினம் அந்த நகரில் இருந்து வெளியேறி, அதே நாளில் சிங்கப்பூர் வந்தடைந்தார். அந்த ‘ஸ்கூட்’ விமானத்தில் ஏறியபோது அவரிடம் கொரோனா கிருமித்தொற்றுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.

சாங்கி விமான நிலையத்திற்கு வந்தபின் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்குக் காய்ச்சல் கண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, உடனடியாக அவர் தேசிய தொற்றுநோய்கள் மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் வூஹான் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் உறுதிசெய்யப்பட்டது. தற்போது தேசிய தொற்றுநோய்கள் மையத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நேற்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் 16 பேர் அக்கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சீனாவின் வூஹான் நகரிலிருந்து வந்தவர்கள்.

இதற்கிடையே, கடந்த 14 நாட்களில் சீனா சென்றவர்களுக்கும் சீனாவில் வழங்கப்பட்ட கடப்பிதழ்களைக் கொண்டுள்ளோருக்கும் இன்றிரவு 11.59 மணியில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்படும்.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால விசா வைத்திருப்போர் சிங்கப்பூருக்குத் திரும்ப முடியும் என்றாலும் அவர்கள் 14 நாட்கள் விடுப்பில் இருக்கவேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

சீனாவில் வழங்கப்பட்ட கடப்பிதழ்களைக் கொண்டுள்ள அனைவருக்கும் விசா வழங்குவது தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், சீனக் கடப்பிதழ் வைத்துள்ளோருக்கு முன்னதாக வழங்கப்பட்ட குறுகியகால விசாவும் பலமுறை வந்து செல்வதற்கான ‘மல்டிபிள் விசிட்’ விசாவும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

அதே நேரத்தில், சீனக் கடப்பிதழைக் கொண்டிருக்கும் ஒருவர் வேறு நாட்டில் வசித்து வந்தால் அவருக்கு விசா வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

இந்தக் கட்டுப்பாடுகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்ததல்ல என அமைச்சர் வோங் தெளிவுபடுத்தினார்.

இன்று காலை நிலவரப்படி, வூஹான் கொரோனா கிருமித்தொற்றால் சீனாவில் மாண்டோர் எண்ணிக்கை 259 ஆனது. அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,000ஐ நெருங்குவதாகக் கூறப்பட்டது.

#வூஹான் #தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!