'சிங்கப்பூர் பூல்ஸ்' நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மென்பொருள் கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தது.
இதனால் இணையம் வழியாக டோட்டோ வாங்கியவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அது கூறியிருந்தது.
இணையம் வழியாக வாங்கப்பட்ட டோட்டோ சீட்டுகளில் 49 எண் மட்டும் அச்சடிக்கவில்லை.
இந்த நிலையில், அந்த மென்பொருள் கோளாறு காரணமாக தொலைபேசி வழியாக iTOTO, 4D வாங்கியவர்களில் சிலர் பாதிக்கப்பட்டதாக நேற்று (ஜனவரி 31) 'சிங்கப்பூர் பூல்ஸ்' தெரிவித்தது.
வாடிக்கையாளர்கள் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பதை விவரித்த அது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈடு செய்யப்படும் என்று கூறியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரையில் இணையம் வழியாகவும் விற்பனை நிலையங்கள் வழியாகவும் விற்கப்பட்ட சில சம்பவங்களில் iTOTO சீட்டு களில் 49 எண் தவிர மற்ற எண்கள் இடம்பெற்றிருந்தன. இப்படி தவறாக விற்கப்பட்ட சீட்டுகள் மொத்த விற் பனையில் 0.04% என்று 'சிங்கப்பூர் பூல்ஸ்' நேற்று தெரிவித்தது.
#தமிழ்முரசு #சிங்கப்பூர்பூல்ஸ் #iTOTO #4D