மரண தண்டனை கைதிகளுக்கு விதிக்கப்படும் தூக்கி லிடுதல் தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நிறுத்தி வைக்க இரு கைதிகள் செய்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.
தங்கள் கோரிக்கைக்கு ஆதரவாக அவர்கள் போதிய ஆதாரங்களைத் திரட்ட தவறியதைக் காரணம் காட்டி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 31 வயது கோபி ஆவடியான், 34 வயது தட்சிணாமூர்த்தி காத்தையா ஆகியோர் போதைப்பொருள் கடத்திய குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள். அவர்களின் தண்டனையை நிறுத்தி வைக்க அவர்கள் சார்பில் வழக்கறிஞர் எம். ரவி உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.
அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடுவான பிப்ரவரி 10ஆம் தேதி காலை 4 மணிக்குள் திரு ரவி தமது கட்சிக்காரர்களின் மனு தொடர்பில் எவ்வித ஆதாரங்களை யும் சமர்ப்பிக்கவில்லை. ஆதனால் அவர்களின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் அறிக்கை கூறியது.
இதற்கிடையே, அரசுத்தரப்பு வழக்கறிஞர் வோங் வூ குவாங் இம்மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற வழக்குக்கு முந்திய கலந்துரையாடலில் தம்மை மிரட்டும் வகையில் நடந்துகொண்டதாகவும் இதனால் தமது கட்சிக்காரரின் வழக்குக்கு நியாயமான விசாரணை கிடைக்கும் உரிமை மீறப்பட்டுள்ளது என்று கூறி திரு ரவி தாக்கல் செய்த மனுவை நீதிபதி வெலரி தியேன் தள்ளுபடி செய்தார்.