ஆள் கடத்தல் வழக்கு: ஆதாரம் திரட்டுவதே பெரும் சவால்

தங்களின் இரவு கேளிக்கை விடுதியில் பணியாற்றிய மூன்று பெண் ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களைத் தவறாகப் பயன்படுத்திய குற்றங்களுக்காக ஓர் இந்தியத் தம்பதிக்கு ஐந்து ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மல்கர் சாவ்லாராம் ஆனந்த், 51 - பிரியங்கா பட்டாச்சார்யா ராஜேஷ், 31 என்ற இருவருக்கும் ஆளுக்கு $7,500 அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் எதிராக ஆதாரங்களைத் திரட்டுவது பெரும் சவாலாக இருந்ததாக கூறப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியம் இதுபோன்ற வழக்குகளுக்கு மிக முக்கியம் என்றும் சாட்சியம் அளிக்க அவர்கள் முன்வரவேண்டும் என்றும் ஆள் கடத்தல் தொடர்பான சிங்கப்பூர் அமைப்புகள்நிலை பணிக்குழுவைச் சேர்ந்த திருவாட்டி ஷர்லி லிம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நடந்ததைக் கூறத் தயக்கம் காட்டுவதோ அதிகமாகப் பாதிக்கப்பட்டதால் யாரையும் நம்பாமல் விலகிக்கொள்வதோ வழக்கை பலவீனமாக்கும் என்றார் திருவாட்டி லிம்.

ஆங்கிலத்தில் பேச சிரமப்பட்ட அந்த பங்ளாதேஷ் ஊழியர்களிடமிருந்து கோர்வையானதொரு சாட்சியத்தைப் பெற சிரமப்பட்ட போதும் இறுதியில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

ஆள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஊழியர்களைக் கடத்தியதற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் இருவர் இத்தம்பதியினர். இந்தத் தண்டனை விதிப்பே ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றார் திருவாட்டி லிம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!