மாணவர்களுக்கான திருக்குறள் விழாப் போட்டிகள் ரத்து
இவ்வாண்டு ‘கொவிட்-19’ கிருமித்தொற்று சம்பவங்கள் சிங்கப்பூரில் பரவி வரும் காரணத்தால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மார்ச் மாதம் நடைபெறவிருந்த மாணவர்களுக்கான திருக்குறள் போட்டிகள் நடைபெறாது. இருப்பினும் திருக்குறள் விழா, மார்ச் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும்.
தேசிய நூலக வாரியத்தின் சில நிகழ்வுகளில் மாற்றங்கள்
கொரோனா கிருமித்தொற்று நிலையைக் கருதி தேசிய நூலக வாரியம் அதன் நிகழ்ச்சிகள் சிலவற்றை ரத்து செய்துள்ளது. சில நிகழ்ச்சிகள் பிந்தைய நாளுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இன்றும் அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்றும் நடைபெறவிருந்த ‘துளிர்’ ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிகழ்ச்சிகளுக்கும் பயிலரங்குகளுக்கும் செல்வதற்குமுன் அவற்றில் மாற்றம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிசெய்துகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.