கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் சிங்கப்பூரிலுள்ள கத்தோலிக்கத் தேவாலயங்கள் ஞாயிறு வழிபாடுகளை நேற்று ரத்து செய்திருந்தன. நொவீனாவிலுள்ள செயின்ட் அன்போன்சஸ் தேவாலயத்தில் அனைத்து கூட்டு வழிபாடுகளும் ரத்து செய்யப்பட்டி ருப்பதாக அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. நேற்று காலையில் 30க்கும் குறைவானவர்களே தேவாலயத்தின் பொதுஇடத்தில் காணப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
கொரோனா கிருமித்தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும் வகையில் சனிக்கிழமை நண்பகலில் இருந்து இங்குள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொது வழிபாடுகள் வரையறையற்று நிறுத்தப்படும் என்று சிங்கப்பூரின் கத்தோலிக்க பேராயர் வில்லியம் கோ வெள்ளிக்கிழமை அறிவித்தார். வழிபாடுகள் நிறுத்தப்பட்டி ருந்தாலும் முன்பதிவு செய்யப்பட்ட வழிபாட்டை சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்க தேவாலாயங்கள் அமைப்பு இணையத் தில் நேற்று ஒளிபரப்பியது. படம்: ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ்