பட்ஜெட்: வெளிநாட்டு ஊழியர்களுக்கான   ‘எஸ் பாஸ்’ ஒதுக்கீடு குறைக்கப்படும்

கட்டுமானம், துறைமுகம், பதப்படுத்தும் துறைகளில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான ‘எஸ் பாஸ்’ எனப்படும் சிறப்பு வேலை அனுமதி அட்டையின் ஒதுக்கீடு குறைக்கப்படும். ‘எஸ் பாஸ்’ ஊழியர்கள் குறைந்தது மாதம் $2,400 சம்பளம் பெற வேண்டும்.

சார்ந்திருப்போர் விகித வரம்பு எனப்படும் ஒரு நிறுவனம் எத்தனை வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு வைக்க லாம் என்ற விகிதம் இரு கட்டங்களாகக் குறைக்கப்படும். முதலாவது, சார்ந்திருப்போர் விகித வரம்பு 20%லிருந்து 18%க்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து குறைக்கப்படும். இரண்டவதாக, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இந்த விகிதம் 15%க்குக் குறையும்.

“இந்த திறன் சார்ந்த வேலைகளை பலதுறைத் தொழிற் கல்லூரி டிப்ளோமா வைத்திருப்பவர்கள் போன்ற உள்ளுர் மக்கள் செய்யலாம். முன்பு இத்தகைய வேலைகளைச் செய்ய உள்ளூர் மக்கள் இல்லாத காரணத்தால் வெளி நாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தோம். இப்போது திறன் வாய்ந்த உள்ளூர் மக்கள் இருப்பதால் சார்ந்திருப் போர் விகித வரம்பு குறைக்கப்படுகிறது,” என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.

கடந்த இரு ஆண்டுகளாக கட்டுமானம், துறைமுகம், பதப்படுத்தும் துறைகளில் பணியாற்றும் ‘எஸ் பாஸ்’ ஊழியர் களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3.8% என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது என்பதையும் அமைச்சர் சுட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!