சிங்கப்பூரில், ஏப்ரல் 4ஆம் தேதியிலிருந்து மே 3ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தமிழ்மொழி விழா பின்னொரு தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக விழாவைத் தள்ளி வைப்பதாக வளர்தமிழ் இயக்கம் அறிவித்தது. தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக 25.4.2020 அன்று சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்த முத்தமிழ் விழா பின்னொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் முத்தமிழ் விழாவை ஒட்டி இம்மாதம் 29ஆம் தேதி அன்று உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்துவதாக இருந்த போட்டிகளும் 28.03.2020 அன்று தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நடத்துவதாக இருந்த போட்டிகளும் பின்னொரு நாளுக்குத் தள்ளிவைக்கப்படுகின்றன. புதிய போட்டி தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இந்த ஆண்டு முத்தமிழ் விழாவை ஒட்டி பொதுமக்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நடத்தும் சிறுகதைப் போட்டிகளுக்கும், மரபுக்கவிதைப் போட்டிக்கும் இம்மாதம் 29ஆம் தேதிக்குள் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்று முன்னர் அறிவித்திருந்தது.
இது 31.03.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த தேதிக்குள் சிறுகதைகளையும் மரபுக் கவிதைகளையும் அனுப்பி வைக்கலாம் என எழுத்தாளர் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.
போட்டி விதிகள் குறித்த விவரங்களுக்கு கழகத்தின் இணையத்தளத்தை நாடலாம். http://singaporetamilwriters. com