வேலைக்குச் சேர்ந்த இரண்டு வாரங்களுக்குள்ளாகவே இந்தோனீசியப் பெண்ணை பலமுறை துன்புறுத்திய முன்னாள் பெண் போலிஸ்காரர் ஒருவருக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பபட்டது. ஒரு கட்டத்தில் நஸ்ரியா முஹமட் இஸா, மளிகைப் பொருட்களை ஒழுங்காக எடுத்து வைக்காததற்காக பணிப்பெண்ணை எட்டி உதைத்து முகத்தில் துப்பினார்.
அடுத்த மாதமே காப்பியில் எறும்பு இருந்ததற்காக 36 வயது பணிப் பெண்ணின் மீது மரக்கட்டையை வீசி காயப்படுத்தினார். நீதிமன்றத்தில் பணிப்பெண்ணைத் தாக்கிய சம்பவங்களை ஒப்புக் கொண்ட அவருக்கு இரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.