$30,000 மதிப்பிலான கஞ்சா கடத்த முயன்ற மலேசிய பெண்கள் இருவர் சிங்கப்பூரில் கைது

சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக கஞ்சா கடத்த முயற்சி செய்த இரண்டு மலேசியப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 19) அன்று அதிகாலை 4.48 மணியளவில் அந்தப் பெண்களின் காரில் 2,017 கிராம் எடையுள்ள இரண்டு பொதி கஞ்சா காரின் பின்புற இருக்கைக்கடியில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

22, 23 வயதுகளில் இருந்த அந்தப் பெண்கள் வந்த கார் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்டது.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தப் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் 1,014 கிராம் எடையுள்ள கஞ்சா அந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு $30,000 (89,855 மலேசிய ரிங்கிட்) என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

#தமிழ்முரசு #மலேசியா #போதைப்பொருள் #கஞ்சா #ICA

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!