போக்குவரத்துக் குற்றம் தொடர்பான தண்டனையிலிருந்து தப்பிக்க போக்குவரத்து போலிஸ் அதிகாரியிடம் $100 லஞ்சம் கொடுக்க முயன்ற லாரி ஓட்டுநருக்கு நான்கு வாரச் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
62 வயது டியோ டெக் யோங் கொடுத்த லஞ்சத்தை போலிஸ் அதிகாரி சிவசூரிய மணியம் கேசவன் ஏற்க மறுத்து இதுகுறித்து புகார் செய்தார்.
ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் டியோ மீது கடந்த ஆண்டு நவம்பர் 27ல் குற்றச்சாட்டு பதிவானது.

