தென்கொரியாவின் டேகு, சியோங்டோ நகரங்களுக்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கி உள்ளது. அந்நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் கவனமுடன் இருக்குமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது. இவ்விரு நகரங்களில் கிருமித்தொற்று சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த பயண ஆலோசனையை அமைச்சு விடுத்துள்ளது.
சிங்கப்பூரர்களுக்கு பயண ஆலோசனை
1 mins read
தென்கொரியாவின் டேகுவில் உள்ள ஓர் ஈரச்சந்தையில் கிருமித்தொற்றைத் தடுக்கும் வகையில் மருந்தடிக்கும் ஊழியர்கள். படம்: ஏஎஃப்பி -

