மனிதவள அமைச்சிடம் பொய்யான தகவல் அளித்ததாக சீனத் தம்பதி மீது குற்றம்சாட்டப்படவிருக்கிறது.
வூஹானைச் சேர்ந்த 38 வயது சீன நாட்டவரான ஹு ஜுன்னும் அவரது மனைவி 36 வயது ஷி ஷாவும் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டனர்.
திரு ஹு குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். திருமதி ஷி தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் இவர்களுக்கு எப்படி கிருமித் தொற்றியது என்பது குறித்து அமைச்சு விரிவான விசாரணை மேற்கொண்டபோது இருவரும் தங்களுடைய நடமாட்டங்களை பற்றி தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அமைச்சின் தீவிர விசாரணையில் இவர்களுடைய நடமாட்டம் பற்றிய விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து கொரோனா கிருமி பரவல் தொடர்பில் முதல் முறையாக தொற்றுநோய் சட்டத்தின் கீழ் பொய்யான தகவல்களை அளித்ததற்காக தம்பதியர் மீது குற்றம் சாட்டப்படும் என்று அமைச்சு கூறியுள்ளது.