உட்லண்ட்ஸ் வட்டாரத்திலுள்ள அடுக்குமாடி புளோக்கில் இன்று காலை ஏற்பட்ட தீயால் 25 பேர் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறினர்.
உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 82லுள்ள புளோக் 845யின் எட்டு முதல் பத்தாவது மாடியிலுள்ள மூன்று வீடுகளை இந்தத் தீ பாதித்துள்ளது. படுக்கை அறை ஒன்றில் தீ மூண்டதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட புளோக்கிற்கு எதிர் புளோக்கிலிருந்து எடுக்கப்பட்ட ஓர் காணொளி, கரும்புகை வெளிவருவதைக் காட்டுகிறது.
இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று போலிசார் தெரிவித்தனர். இருந்தபோதும் 20 பேர் தங்களது வீட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டி இருந்ததாக போலிசார் கூறினார். எட்டாம் மாடியிலுள்ள மேலும் ஐவர் தங்களது குடும்பத்தைவிட்டு வெளியேறினர்.
தீச்சம்பவத்திற்கான காரணத்தை குடிமைத் தற்காப்புப் படையினர் ஆராய்ந்து வருகின்றனர்.