தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்களிப்பு தினம் இடம்பெறுவதற்கான சாத்தியமுள்ள தேதிகள்

2 mins read
053975e2-fb21-496b-a1be-33f5035e0e13
கோப்புப்படம்: எஸ்டி -

தேர்­தல் தொகுதி எல்லை அறிக்கை நேற்று முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்­ட­தைத் தொடர்ந்து, சிங்­கப்­பூ­ரில் பொதுத் தேர்­தல் எப்­போது நடை­பெறும் என்­பது குறித்த கேள்வி எழுந்து உள்­ளது.

மார்ச், ஏப்­ர­லுக்கு இடையே அல்­லது மே, ஜூன் நடுப்­ப­கு­திக்கு இடையே தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம் என அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கணிக்­கின்­ற­னர். கொவிட்-19 கிருமி பர­வல் சம்­ப­வங்­க­ளால் தேர்­தல் ஒத்தி­வைக்­கப்­படும் சாத்­தி­யம் குறைவு எனத் தெரி­கிறது.

தேர்­தல் தொகுதி எல்லை அறிக்கை எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட முன்­ன­தாக வெளி­யாகி உள்­ள­தால், மே மாதம் தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம் என 'சிம் குளோ­பல் எடு­கே­ஷன்' பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இணைப் பேரா­சி­ரி­ய­ராக பணி­பு­ரி­யும் டாக்­டர் ஃபெலிக்ஸ் டான் கணித்­துள்­ளார்.

"தேர்­தலை நடத்தி முடித்­து­விட அர­சாங்­கம் விரும்­பும். அப்­போ­து­தான் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் அது கவ­னம் செலுத்த முடி­யும்," என்று அவர் கூறி­னார்.

கிரு­மித்­தொற்று உரு­வெ­டுப்­ப­தற்கு முன்­ன­தா­கவே, இவ்­வாண்­டு­தான் தேர்­தல் நடை­பெ­றும் என்று வாக்­கா­ளர்­கள் எதிர்­பார்த்து இருந்­த­தைச் சுட்­டிய அவர், "காத்­தி­ருப்பு ஆட்­டத்தை விளை­யா­டு­வ­தில் இனி அர்த்­தம் இல்லை" என்­றார்.

கீழ்க்­கா­ணும் மூன்று தேதி­களில் ஏதே­னும் ஒன்­றில் தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம் எனக் கணிக்­கப்­ப­டு­கிறது.

முத­லா­வது, ஏப்­ரல் 18ஆம் தேதி. ஏப்­ரல் மாதத்­தில் சமய நிகழ்­வு­கள் சில இடம்­பெ­று­கின்­றன. வார­யி­றுதி நாளான ஏப்­ரல் 18, வாக்­க­ளிப்பு நடத்த ஒரு பொருத்­த­மான தேதி­யா­கும்.

இதன்­மூ­லம், ஈஸ்­டர் தினம் இடம்­பெ­றும் வார­யி­று­தியை (ஏப்­ரல் 11-12) தவிர்ப்­ப­தோடு, முஸ்­லிம்­கள் நோன்பு வைக்­கும் மாத­மான ரம­லான் தொடங்கு­வ­தற்­குள் தேர்­தலை நடத்­தி­விட முடி­யும். ஏப்­ரல் 23ஆம் தேதி ரம­லான் தொடங்­கு­கிறது.

எனி­னும், ரம­லான் மாதத்­தில் தேர்­தல் நடத்­தப்­பட்­டால் மே மாதம் முதல் வார­யி­று­தி­யில் அது இடம்­பெ­றக்­கூ­டும் எனச் சொல்­லப்­ப­டு­கிறது. வெள்­ளிக்­கி­ழமை, மே 1ஆம் தேதி தொழி­லா­ளர் தினம் இடம்­பெறு­வ­தால் அதற்கு அடுத்த நாள் பிர­சார ஓய்வு தின­மாக அறி­விக்­கப்­ப­ட­லாம். அதற்கு அடுத்த நாளான ஞாயிற்­றுக்­கி­ழமை வாக்­க­ளிப்பு தினம் இடம்­பெ­ற­லாம். 2006, 2011ஆம் ஆண்டு­களில் பொதுத் தேர்­தல் மே மாத தொடக்­கத்­தில் நடை­பெற்­றது நினை­வு­கூ­ரத்­தக்­கது.

அப்­படி மேற்­கூ­றப்­பட்ட தேதி­யும் கடந்­து­விட்­டால், ஜூன் மாத முதல் வார­யி­று­தி­யில் தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம். மே 24, 25 தேதி­களில் நோன்பு பெரு­நாள் விடு­முறை முடிந்த வுடன், தேர்­தலை நடத்­து­வ­தற்­கான உத்­த­ர­வாணை பிறப்­பிக்­கப்­பட்­டால், பள்ளி விடு­முறை கால­மான ஜூன் 6 அல்­லது 7ஆம் தேதி தேர்­தல் நடக்­க­லாம்.

தேர்­தல் ஆணை பிறப்­பிக்­கப்­பட்ட குறைந்­தது ஐந்து வேலை நாட்­களில் வேட்­பு­மனு தாக்­கல் செய்­யப்­பட வேண்­டும்.