பொதுமக்களின் பார்வைக்கு வாக்காளர் பதிவேடு

பொதுமக்களின் பார்வைக்கு வாக்காளர் பதிவேடு

1 mins read
ea6c36db-4018-4b7c-9dda-ac3b384fa9ce
படம்: கோப்புப்படம், எஸ்டி -

சிங்­கப்­பூ­ரில் அடுத்த பொதுத் தேர்­த­லில் வாக்­க­ளிப்­ப­தற்­கான தகு­தி­யு­டைய சிங்­கப்­பூ­ரர்­கள் இடம்­பெற்­றுள்ள பதி­வேடு தயா­ராக உள்­ளது. நேற்று தொடங்கி இம்­மா­தம் 27ஆம் தேதி வரை பொது­மக்­க­ளின் பார்­வைக்கு அது வைக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்­தல் தொகுதி எல்லை மறு­ஆய்­வுக் குழு, அதன் ஆக அண்­மைய அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ள­தைத் தொடர்ந்து வாக்­கா­ளர் பதி­வேடு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அடுத்த பொதுத் தேர்­தல் கூடிய விரை­வில் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான அறி­குறி இது எனக் கூறப்­ப­டு­கிறது.

21 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்ட வய­து­டைய சிங்­கப்­பூ­ரர்­கள் வாக்­கா­ளர் பதி­வேட்­டில் தங்­க­ளது விவ­ரங்­க­ளைச் சரி­பார்க்க, தேர்­தல் துறை­யின் இணை­யப்­பக்­கத்­திற்­குச் செல்­ல­லாம். அல்­லது 'சிங்­பாஸ்' செய­லியை நாட­லாம். தேசிய அடை­யாள அட்டை அல்­லது கடப்­பி­தழை எடுத்­துக்­கொண்டு வீட்­டிற்கு அரு­கி­லுள்ள சமூக மன்றத்திற்கோ பிரின்­சப் லிங்­கில் அமைந்­துள்ள தேர்­தல் துறை அலுவலகத்திற்கோ மக்­கள் செல்­ல­லாம்.

வெளி­நா­டு­களில் உள்ள சிங்­கப்­பூ­ரர்­கள், அங்­கி­ருக்­கும் சிங்­கப்­பூர் தூத­ரத்­திற்­குச் செல்­ல­லாம்.