சிங்கப்பூர் பங்குச் சந்தை வீழ்ச்சி

சிங்கப்பூர் பங்குச் சந்தை வீழ்ச்சி

1 mins read

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக உலக நாடு­க­ளின் பொரு­ளி­யல் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், உல­க­ளா­விய மத்­திய வங்­கி­க­ளின் அவ­ச­ர­கா­லக் கொள்கை ஒருங்­கி­ணைப்பு ஆசிய பங்­குச் சந்தை முத­லீட்­டா­ளர்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெற தவ­றி­விட்­டது.

சிங்­கப்­பூ­ரின் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பங்­குச் சந்தை குறி­யீடு 5.25 விழுக்­காடு சரிந்து 2,495.8ஆகப் பதி­வா­னது. தாய்­லாந்து, பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­க­ளின் பங்­குச் சந்­தை­கள் 5 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மான சரி­வைப் பதிவு செய்­துள்­ளன. ஆஸ்­தி­ரே­லி­யா­வின் S&P/ASX200 பங்­குச் சந்தை வர­லாறு காணாத சரி­வைக் கண்­டுள்­ளது. அதன் குறி­யீடு இது­வரை இல்­லாத 10 விழுக்­காடு இறக்­கம் கண்­டுள்­ளது.

"பங்கு சந்­தை எவ்­வ­ளவு கீழே இறங்­கும் என்று யாரா­லும் சொல்ல முடி­யாது. அனை­வ­ரும் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளு­டன் மற்ற அம்­சங்­க­ளையும் கூர்ந்து கவ­னிக்க வேண்­டும். இதற்கு முன்­னர் நோய்ப் பர­வல் கார­ண­மாக பங்­கு­கள் அதிக அள­வில் மூன்­றி­லி­ருந்து ஐந்து மாதங்­கள் வரை விற்­கப்­பட்­டுள்­ள­ன.முத­லீட்­டா­ளர்­கள் இதை கவ­னத்­தில் கொள்ள வேண்­டும்," என்று சிங்கப்பூரில் உள்ள யுனைடெட் ஃபர்ஸ்ட் பாட்னர்சின் ஆசிய ஆய்வுப் பிரிவின் தலைவர் திரு ஜஸ்டின் டாங் தெரிவித்தார்.