சீக்கிய கோயில்களில் உணவு விநியோகம் தற்காலிக நிறுத்தம்

சீக்கிய கோயில்களில் உணவு விநியோகம் தற்காலிக நிறுத்தம்

1 mins read
174a4526-89fd-4f80-a07f-bf413507ba08
கோப்புப் படம்: எஸ்டி -

அடுத்த நான்கு வாரங்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரில் உள்ள சீக்­கிய கோயில்­களில் உணவு விநி­யோ­கம், பரி­மா­று­தல் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­படும்.

ஆனால் சீக்­கிய கோயில்­களில் நடை­பெ­றும் திரு­ம­ணங்­க­ளுக்கு உணவு விநி­யோக விதி­முறை சற்று தளர்த்­தப்­படும்.

திரு­ம­ணத்­தில் கலந்­து­கொள்­வர் சாப்­பிட வரும்­போது பல பிரிவுகளா­கப் பிரிக்­கப்­ப­டு­வர். இதன் மூலம் அவர்­க­ளுக்­கி­டை­யி­லான தொடர்பு கட்­டுப்­ப­டுத்­தப்­படும்.

மத்­திய சீக்­கிய கோயி­லி­லும் சீலாட் சாலை சீக்­கிய கோயி­லி­லும் இறை வழி­பாட்டு சடங்­கு­கள் இணை­யத்­தில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­படும்.

உல­கெங்­கும் கொரோனா கிரு­மித்­தொற்று மோச­ம­டைந்து வரும் வேளை­யில் கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த சீக்­கிய கோயில்­கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்­கின்­றன.

சீக்­கிய கோயில்­க­ளுக்­குத் தற்­போது வரு­வ­தைத் தவிர்க்­கு­மாறு முதிய சீக்­கி­யர்­க­ளுக்கு சீக்­கிய கோயில்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.