உலகிலேயே ஆக அதிகப் பொருளியல் சுதந்திரம் பெற்ற நாடாக ஹாங்காங் 1995ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தது. இருப்பினும் ஹாங்காங்கில் தற்போது நிலவி வரும் அமைதியின்மையால் அனைத்துலக நிதி மையம் என்ற அதன் தகுதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'பொருளியல் சுதந்திரம் 2020' ஆய்வில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.
சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் தொடர்ந்து அதன் நிலையைத் தக்க வைத்துக்கொண்டதால் சிங்கப்பூர் பட்டியலில் முதல் இடம்பெற்றது.
வர்த்தகர்களுக்குச் சிறந்த இடமாகச் சென்ற ஆண்டு வரை விளங்கிய ஹாங்காங், அதன் அரசியல் மற்றும் சமூக நெருக்கடியால் முதலீட்டு வாய்ப்புகளை இழந்துள்ளதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது.

