கொரோனா கிருமி தொடர்பில் தேசிய சம்பள மன்றம் கூட்டம்

கொரோனா கிருமி தொடர்பில் தேசிய சம்பள மன்றம் கூட்டம்

1 mins read
fc69b8ad-f3c5-4609-ba64-b472fa252727
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கூடும் தேசிய சம்பள மன்றம், கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு சற்று விரைவாகவே அதன் கூட்டத்தை நேற்று ஏற்பாடு செய்திருந்தது. படம்: எஸ்டி, ஓங் வீ ஜின் -

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கூடும் தேசிய சம்பள மன்றம், கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு சற்று விரைவாகவே அதன் கூட்டத்தை நேற்று ஏற்பாடு செய்திருந்தது. முதலாளிகள், ஊழியர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் ஆகிய முத்தரப்பை உள்ளடக்கியது இம்மன்றம். சம்பளம் மற்றும் வேலை விவகாரங்கள் தொடர்பான வருடாந்திர வழிகாட்டிகளைப் பற்றி கலந்தாலோசிக்க மன்றம் கூடுவதாக மனிதவள அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்தது.