தனி­யார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு உதவி

தனி­யார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு உதவி

2 mins read
d50055d2-4cda-45a6-8601-8be514527d50
'டிரை­வர் கேர் ஃபண்ட்' நிதிக்கு இப்­போது முதல் ஏப்­ரல் 17ஆம் தேதி வரை ஓட்­டு­நர்­கள் விண்­ணப்­பிக்­க­லாம் என்று தேசிய தனி­யார் வாடகை வாகன சங்­கம் கூறி­யுள்­ளது. படம்: ஜேசன் குவா -

கொரோனா கிருமி பர­வ­லால் வரு­மானம் குறைந்து அவ­திக்­குள்­ளா­கும் தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­களுக்கு உதவி வழங்­கப்­ப­டு­கிறது. கடந்த மாதம் அறி­விக்­கப்­பட்ட உத­வித் திட்­டத்­திற்­குத் தகுதி பெறாத ஓட்­டு­நர்­க­ளுக்கு இந்த உதவி கைகொடுக்கிறது.

அர­சாங்­கம், தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) அமைத்­துள்ள புதிய நிதிக்கு ஓட்டு­நர்­கள் விண்­ணப்­பிக்­க­லாம் எனப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் கோ பூன் வான் நேற்று தெரி­வித்­தார்.

'டிரை­வர் கேர் ஃபண்ட்' என்று அழைக்­கப்­படும் இப்­பு­திய நிதிக்கு இப்­போது முதல் ஏப்­ரல் 17ஆம் தேதி வரை ஓட்­டு­நர்­கள் விண்­ணப்­பிக்­க­லாம் என்று தேசிய தனி­யார் வாடகை வாகன சங்­கம் கூறி­யுள்­ளது.

ஓட்­டு­நர்­க­ளின் விண்­ணப்­பம் ஏற்­கப்­பட்­டால் அவர்­க­ளுக்கு ஒரு­முறை வழங்­கப்­படும் தொகை­யாக $300 வழங்­கப்­படும்.

"இவ்­வாண்டு பிப்­ர­வரி 13ஆம் தேதிக்கு முன்பு பதி­வு­பெற்ற தனி­யார் வாடகை வாகன ஓட்­டு­ந­ராக நீங்­கள் இருந்­தால், இதற்கு முன்­ன­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்த உதவித் திட்டத்தின் மூலம் நீங்­கள் உதவி பெற­வில்லை என்­றால், டிரை­வர் கேர் நிதிக்கு விண்­ணப்­பிப்­பது குறித்து நீங்­கள் பரி­சீ­லிக்­க­லாம்," என்று சங்­கம் வெளி­யிட்ட அதன் ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டது.

உதா­ர­ணத்­திற்கு, சமூக சுகா­தார உத­வித் திட்­டத்­தின்­கீழ் (சாஸ்) அவர்­கள் நீல அல்­லது ஆரஞ்சு நிற அட்­டையை வைத்­தி­ருப்­ப­வர்­க­ளாக இருக்­க­லாம். அன்­றாட வாழ்க்­கை­யில் ஏற்­படும் செல­வு­க­ளைச் சமா­ளிப்­ப­தில் சிர­மத்தை எதிர்­நோக்­கு­ப­வர்­க­ளாக இருக்­க­லாம்.

ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்­டி­ருந்த $77 மில்­லி­யன் மதிப்­பி­லான உத­வித் திட்­டத்­திற்­குத் தாங்­கள் தகுதி பெற­வில்லை என ஓட்­டு­நர்­கள் பலர் கருத்து கூறி­ய­தைத் தொடர்ந்து இப்­பு­திய திட்­டம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. முத­லா­வது திட்­டம், டாக்சி மற்­றும் முழுநேர தனி­யார் வாடகை வாகன ஓட்டுநர்­களை இலக்­காக கொண்­டி­ருந்­தது.