10,000 ஊழியர்கள் பலனடைய பயிற்சித்திட்டம்

10,000 ஊழியர்கள் பலனடைய பயிற்சித்திட்டம்

2 mins read
3c747364-9492-474e-a9e2-b6ffd61ff732
'ஃபேர்மோண்ட் சிங்கப்பூர்' ஹோட்டலில் பயிற்சி பெறும் ஊழியரின் பணியைப் பார்வையிடும் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட்(வலமிருந்து இரண்டாவது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உணவு சேவை­கள் மற்­றும் வர்த்­த­கத் துறை­களில் உள்ள முத­லா­ளி­கள், தங்­கள் ஊழி­யர்­க­ளின் திறன் மேம்­பாட்­டுக்­காக $32 மில்­லி­ய­னுக்கு மேலான நிதி­யு­த­வியை நாட­லாம். 'ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர்' (எஸ்­எஸ்ஜி) மூலம் 1,000க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த சுமார் 10,000 ஊழி­யர்­கள் பல­ன­டை­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சென்ற மாதம் அறி­விக்­கப்­பட்ட வரவு­செ­ல­வுத் திட்­டத்­தில் குறிப்­பி­டப்­பட்ட $4 பில்­லி­யன் ஆத­ர­வுத் திட்­டத்­தின் ஒரு பகுதி இந்த மேம்­ப­டுத்­தப்­பட்ட பயிற்சி ஆத­ர­வுத் திட்­டம்.

உண­வுச் சேவை­கள் மற்­றும் வர்த்­த­கத் துறை­களில் உள்ள ஊழி­யர்­கள், திறன் மேம்­பாட்­டில் ஈடு­ப­வ­தற்­கும் வர்த்­தக ரீதி­யாக ஏற்­படும் செல­வு­க­ளைச் சமா­ளிப்­ப­தற்­கும் இந்த 'எஸ்­எஸ்ஜி' திட்­டம் கைகொ­டுக்­கும் என்று கூறப்­பட்­டது.

ஏப்­ரல் 1ஆம் தேதி தொடங்கி அடுத்த மூன்று மாதங்­க­ளுக்­குத் தங்­க­ளின் ஊழி­யர்­க­ளைக் குறிப்­பிட்ட சில பயிற்­சித் திட்­டங்­க­ளுக்கு அனுப்­பும் முத­லா­ளி­கள் இத்­திட்­டம் வழி பல­ன­டை­வர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று சூழ்­நி­லை­யால் பாதிக்­கப்­பட்ட சுற்­றுப்­ப­ய­ணம் மற்­றும் ஆகா­யத் துறை­க­ளுக்கு அமல்­ப­டுத்­தப்­பட்ட திட்­டங்­கள் போல இவை­யும் உள்­ள­தாக வர்த்­தக, தொழில் மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் கூறி­னார்.

ஊழி­யர்­க­ளுக்கு நிறு­வ­னங்­கள் ஆத­ரவு வழங்க உத­வு­வ­தற்­குக் கூடு­தல் நட­வ­டிக்­கை­களை எடுத்­திட அர­சாங்­கம் ஆலோ­சித்து வரு­வ­தா­க­வும் திரு சீ குறிப்­பிட்­டார்.

மூன்று மாதங்­கள் முடிந்த பின்­னர் இரண்­டா­வது உத­வித் திட்­டம் மூலம் இது நடக்­க­லாம்.

தற்­போ­தைய கொரோனா கிரு­மிப்­ப­ர­வல் சூழ்­நி­லை­யி­லும் கிரு­மித்­தொற்று ஒரு முடி­வுக்கு வந்த சூழ்­நி­லை­யி­லும் ஊழி­யர்­கள் மற்­றும் நிறு­வ­னங்­கள் தொடர்ந்து பய­னுள்ள வகை­யில் செய­லாற்­றிட திறன் மேம்­பாடு முக்­கி­யம் என்று அமைச்­சர் சீ சுட்­டி­னார்.