முஃப்தி: பெரிய சமயக் கூட்டங்களைத் தவிர்க்கவும்

முஃப்தி: பெரிய சமயக் கூட்டங்களைத் தவிர்க்கவும்

1 mins read
77fae1c0-2795-4c19-b5f7-9ddfcd64257a
வெளி­நா­டு­களில் நடை­பெ­றும் பெரிய சம­யக் கூட்­டங்­க­ளுக்­கு செல்­வ­தைத் தவிர்த்­து­வி­டு­மாறு சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) இங்­குள்ள முஸ்­லிம்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.  பைடம்: எஸ்டி, திமத்தி டேவிட் -

வெளி­நா­டு­களில் நடை­பெ­றும் பெரிய சம­யக் கூட்­டங்­க­ளுக்­கு செல்­வ­தைத் தவிர்த்­து­வி­டு­மாறு சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) இங்­குள்ள முஸ்­லிம்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்று பர­வு­வ­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் முயி­சின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று முஃப்தி நஸி­ரு­தீன் முகம்­மது நாசிர் இந்த அறி­வு­றுத்­த­லைப் பதி­விட்­டார்.

பெரு­ம­ள­வில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட சம­யக் கூட்­டங்­க­ளால் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட டாக்­டர் நஸி­ரு­தீன், கிரு­மி ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரில் உள்ள முஸ்­லிம்­கள் தங்­க­ளின் பங்கை ஆற்ற வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­தார்.

"கிரு­மியை விட இறை­வ­னுக்கே அதி­க­மாக அஞ்­சு­வ­தாக வெளி­நாட்டு சமய நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்­கள் சிலர் கூறித் தங்­கள் கூட்­டங்­க­ளைத் தொடர்ந்து நடத்­து­வ­தாக கேள்­விப்­பட்­டேன்," என்­றார்.

"அறி­வற்ற, பொறுப்­பற்ற நடத்­தைக்கு இது நேர­மல்ல. இதை நான் தெளி­வா­கக் கூறிக்­கொள்ள விரும்­பு­கி­றேன்," என்­றார் முஃப்தி நஸி­ரு­தீன்.

கோலா­லம்­பூர் பள்­ளி­வா­சல் ஒன்­றில் நடை­பெற்ற ஒரு சமய நிகழ்­வில் 16,000க்கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்­ட­னர், அதில் கலந்து ­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­களில் குறைந்­தது ஐவர் இங்கு திரும்­பிய பின், கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டது உறு­தி­யா­னது. நிகழ்­வில் கலந்­து­கொண்ட 101 சிங்­கப்­பூ­ரர்­கள் இது­வரை அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர்.

"நமக்­கும் பிற­ருக்­கும் ஆபத்து விளை­விக்­கா­மல் நடந்­து­கொள்­வ­தற்கே நாம் முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும்," என்று முஃப்தி குறிப்­பிட்­டார்.