திட்டமிட்டபடி பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கப்படும்

திட்டமிட்டபடி பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கப்படும்

3 mins read
2aaa9ee8-8f70-4366-a8df-aa9bd99497f0
பாலர் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் உடல் வெப்பநிலை அடிக்கடி பரிசோதிக்கப்பட வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை கடந்த சில நாட்­க­ளா­கத் தொடர்ந்து அதி­க­ரித்து வந்­தா­லும் திட்­ட­மிட்­ட­படி வரும் திங்­கட்­கிழமை 23ஆம் தேதி பள்­ளி­களும் பாலர் பள்­ளி­களும் திறக்­கப்­படும் என கல்வி அமைச்சு அறி­வித்து உள்­ளது.

பள்ளி விடு­மு­றைக் காலம் மேலும் நீட்­டிக்­கப்­ப­ட­லாம் என்ற எதிர்­பார்ப்பு நில­விய வேளை­யில், திட்­ட­மிட்­ட­படி பள்­ளி­கள் திறக்­கப்­படும் என்ற அறி­விப்பு வெளி­யாகி இருக்­கிறது.

அதே நேரத்­தில், கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி, பள்­ளி­கள், பாலர் பள்­ளி­கள், மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள், ஊழி­யர்­களில் எவ­ரே­னும் இம்­மா­தம் 14ஆம் தேதி தொடங்­கிய பள்ளி விடு­மு­றை­யின்­போது வெளி­நாடு சென்­றி­ருந்­தால் அவர்­கள் நாடு திரும்­பிய நாளில் இருந்து 14 நாட்­கள் கட்­டாய விடுப்­பில் வீட்­டி­லேயே இருக்க வேண்­டும். அத்­து­டன், இரு வார காலத்­திற்கு இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள் ரத்து செய்­யப்­ப­டு­கின்­றன என்­றும் மாண­வர்­கள் தள்­ளித் தள்ளி அமர வைக்­கப்­ப­டு­வர் என்­றும் கல்வி அமைச்சு, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு, பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்பு ஆகி­யவை தெரி­வித்­துள்­ளன.

பாலர் பள்­ளி­களில் மாண­வர்­களுக்­கும் ஆசி­ரி­யர்­கள் உள்­ளிட்ட ஊழி­யர்­க­ளுக்­கும் அடிக்­கடி உடல் வெப்­ப­நிலை பரி­சோ­திக்­கப்­படும்.

"கல்வி முறை­யை­யும் மாண­வர்­க­ளை­யும் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க வேண்­டும் என்­பதே நமது முன்­னு­ரி­மை­யாக இருக்க வேண்­டும். அப்­படி கல்வி முறையை வலு­வா­கப் பாது­காப்­ப­தன் மூலம் அது தொடர்ந்து இயங்­கும்; பல­ருக்­கும் இடை­யூ­று­கள் ஏற்­ப­டாது. இல்­லா­வி­டில், மருத்­து­வ­ம­னை­க­ளி­ளும் இன்­றி­ய­மை­யாத சேவை­களை வழங்­கும் இடங்­க­ளி­லும் பணி­யாற்­று­வோர் உட்­பட பெற்­றோர்­கள் பல­ரும் வேலைக்­குச் செல்ல இய­லாது," என்று கல்வி அமைச்­சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்­கம் வழி­யா­கக் கூறியுள்ளார்.

சிங்­கப்­பூர் இளை­யர் விழா­வும் தேசிய பள்ளி விளை­யாட்­டுப் போட்­டி­களும் ஒத்தி­வைக்­கப்பட்­டுள்­ளன. இந்த அறி­விப்­பு­க­ளால் மாண­வர்­களும் பெற்­றோர்­களும் பயிற்­று­நர்­களும் ஏமாற்­ற­ம­டைந்­து இ­ருக்­க­லாம் அல்­லது அசௌ­க­ரி­ய­மாக உண­ர­லாம் என்­பதை திரு ஓங்­கும் ஒத்­துக்­கொண்­டார்.

இந்த ஒரு வார விடு­மு­றை­யின்­போது எத்­தனை மாண­வர்­கள் வெளி­நாடு சென்­ற­னர் என்ற தக­வல் வெளி­யி­ட­ப்படவில்லை.

ஆயி­னும், "ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்­களும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரும் வெளி­நாடு சென்று திரும்­பி­யுள்­ள­னர் அல்­லது திரும்பத் தொடங்­கி­யுள்­ள­னர்," என்று அமைச்­சர் ஓங் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"கட்­டாய விடுப்பு கார­ண­மாக பள்­ளிக்­குச் செல்ல முடி­யாத மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்தே படிக்­கும் வகை­யில் அவர்­க­ளின் பள்­ளி­கள் ஆத­ரவு வழங்­கும். அதே­போல, வெளி­நாடு சென்­றி­ருந்த ஆசி­ரி­யர்­க­ளால் சில பள்­ளி­களும் பாதிக்­கப்­ப­ட­லாம். அந்­தப் பள்­ளி­களுக்­குக் கல்வி அமைச்சு தன்­னா­லான உத­வி­களை வழங்கி, கற்­பித்­தல் பணி­கள் பாதிக்­கப்­ப­டா­மல் இருப்­பதை உறு­தி­செய்­யும்," என்­றும் அமைச்­சர் சொன்­னார்.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரர்­கள் உட்­பட வெளி­நா­டு­களில் இருந்து வரும் அனை­வ­ரும் 14 நாட்­கள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்று கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்­கான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது. அத்­து­டன், சிங்­கப்­பூர்­வா­சி­கள் வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளைத் தவிர்க்­கு­மா­றும் அது அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

அதே வேளை­யில், மாண­வர்­கள், ஊழி­யர்­கள் உட்­பட அதி­க­மா­ன­வர்­கள் வெளி­நா­டு­களில் இருந்து நாடு திரும்­பு­வர் என்­ப­தால் வரும் நாட்­களில் கிரு­மித்­தொற்று பாதிப்­பும் அதி­க­மாக இருக்­க­லாம் என்று பணிக்­கு­ழு­வின் தலை­வர்­களில் ஒரு­வ­ரும் தேசிய வளர்ச்சி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.